News August 18, 2024
சனி பிரதோஷத்தில் நந்திக்கு சிறப்பு பூஜைகள்

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு பிரதோஷ பூஜையை காண மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலில் குவிந்தனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Similar News
News February 25, 2026
ஸ்ரீவி: பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் – அதிர்ச்சி

ஸ்ரீவி அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் நவ.2022 – நவ.2023 காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் EX பேரூராட்சி தலைவர் ராஜா புகார் அளித்தார். அதில், பேரூராட்சியில் பல்வேறு பணிகளை செய்ததாக போலி பில் தயார் செய்து ரூ.32.78 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பேரூராட்சியில் பணியாற்றிய 2 செயல் அலுவலர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News February 25, 2026
விருதுநகர்: ரூ.1,20,000 வரை கடன் பெறலாம்

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். SHARE IT
News February 25, 2026
விருதுநகர்: வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கா..? இது கட்டாயம்

விருதுநகர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.


