News August 17, 2024
TNUSRB தலைவரானார் சுனில்குமார்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, Ex DGP சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சார்பு ஆய்வாளர், 2ஆம் நிலை சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர்கள் போன்ற தேர்வுகளை TNUSRB நடத்தி வருகிறது. இதன் தலைவராக இருந்த சீமா அகர்வால், சமீபத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக இருந்து 2021இல் ஓய்வுபெற்ற சுனில்குமார், தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்காதீங்க: கிருஷ்ணசாமி

OPS, சசிகலா, தினகரன் ஆகியோரை சமாளிக்க முடியாமல் EPS திணறுகிறார் என்று கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இதனை அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்க வேண்டும் என்ற அவர், இதற்காக மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க கோரி EPS, அமித்ஷாவிடம் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது

செப்.28-ல் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கே <
News September 18, 2025
விளையாட்டில் அரசியல் உணர்வை கலக்கின்றனர்: PCB

Asia Cup லீக் சுற்றில் பாக்., உடனான வெற்றியை, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் சமர்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறினார். இது விளையாட்டு களத்தில் அரசியலை கலப்பது, விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று பாக்., கிரிக்கெட் வாரியம் (PCB) குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, இரு அணிகளும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.