News August 17, 2024
TNUSRB தலைவரானார் சுனில்குமார்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, Ex DGP சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சார்பு ஆய்வாளர், 2ஆம் நிலை சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர்கள் போன்ற தேர்வுகளை TNUSRB நடத்தி வருகிறது. இதன் தலைவராக இருந்த சீமா அகர்வால், சமீபத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக இருந்து 2021இல் ஓய்வுபெற்ற சுனில்குமார், தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் தாறுமாறாக ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,480-க்கும், 1 சவரன் ₹91,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News November 10, 2025
பெரும் சதி முறியடிப்பு: 360Kg வெடிபொருள்கள் பறிமுதல்

சில நாள் முன்பு, JeM உடன் தொடர்புடைய டாக்டரான அடில் ராதர் உ.பி.,-யில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ஹரியானாவில் மற்றொரு டாக்டரான முஸம்மில் ஷகில் என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 360Kg வெடிபொருள், AK47 துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 20 டைமர்களை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 10, 2025
BREAKING: அனைத்து ரேஷன் கார்டுக்கும் முக்கிய அறிவிப்பு

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக EPS குற்றஞ்சாட்டியதற்கு, அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, நவ.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ., மாதத்திற்கான கோதுமையை இதுவரை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள், 15-ம் தேதிக்கு பின் ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்க கோதுமை வாங்கியாச்சா?


