News August 17, 2024
மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷபீர் ஆலம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
Similar News
News October 22, 2025
மயிலாடுதுறை: 10th பாஸ் போதும்… வேலை ரெடி!

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க*
News October 22, 2025
அமைச்சரை வரவேற்ற மாவட்ட பொறுப்பு அமைச்சர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்கினை, இன்று அமைச்சர் பெருமக்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதனை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வருகை புரிந்துள்ள உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் சந்தித்து வரவேற்றார்.
News October 22, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 231.60 மிமீ மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி, செம்பனார்கோவிலில் (24 மணி நேரத்தில்) அதிகபட்சமாக 48.80 மழையும், மயிலாடுதுறையில் 39.60 மி.மீ, கொள்ளிடத்தில் 44.60 மி.மீ, சீர்காழியில் 42.60 மி.மீ என மாவட்டம் முழுவதும் 231.60 மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.