News August 17, 2024
புத்தகத் திருவிழாவில் வினாடி வினா போட்டிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டிகள் நாளை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளராக இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
காரியாபட்டி அருகே நாகாத்தம்மன் கோயில் திருவிழா

காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் புத்துக்கோயில் 7-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் விழாவில் பக்தர்கள் அழகு குத்தி, காவடி எடுத்து, முளைப்பாரி வளர்த்து தன்னுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
News December 4, 2025
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News December 4, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கை முறை உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அம்மாவுக்கும், மணிகண்டனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


