News August 17, 2024

நெல்லை – தூத்துக்குடி ரயில் சேவை ரத்து

image

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும்.

Similar News

News December 25, 2025

மதுரையில் பறவைகள் கணக்கெடுப்பு

image

மதுரையில் வரும் டிசம்பர்,27 மற்றும் 28ம் தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக, சாமநத்தம், நிலையூர், வண்டியூர், விரகனூர் மதகணை உள்ளிட்ட 25 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் 90472-86690,90922-84531 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், dfomdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு விபரங்களை அனுப்பலாம் என மதுரை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.

News December 25, 2025

மதுரை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE பண்ணுங்க.

News December 25, 2025

மதுரை அருகே மனைவி பிரிவால் வாலிபர் தற்கொலை

image

சத்திரப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் முத்திராஜா (25). இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருடன் தகராறில் ஈடுபட்ட மீனாட்சி தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த முத்துராஜா தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!