News August 17, 2024
சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தால்…

சிறுநீரை நேரம் தாழ்த்தாமல் கழித்து விட வேண்டும். இல்லையேல் கீழ்காணும் 5 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 1) சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகும் 2) சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வழிவகுக்கும் 3) சிறுநீர் பை சுமை தாங்க முடியாமல் சேதமாகும் 4) சிறுநீரை தேக்கி வைக்கும் சிறுநீர் பையில் வலி உருவாகும் 5) இடுப்புப் பகுதி தசைகளை பலவீனமாக்கும்.
Similar News
News October 31, 2025
அன்புமணி மீது பாய்கிறதா வழக்கு?

நேபாளத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற GEN Z தலைமுறையினர் செய்த புரட்சியை போல, தமிழகத்திலும் இளைஞர்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். முன்னதாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து நேபாளத்தில் நடந்த புரட்சி தமிழகத்திலும் நடக்கவேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தார். இதற்காக, வன்முறையை தூண்டுகிறார் என அவர் மீது வழக்கு பாய்ந்தது. இந்நிலையில், அன்புமணி மீதும் வழக்கு பாயுமா?
News October 31, 2025
திமுகவில் இணைந்தனர்…

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. 2011, 2016, 2021 என தொடர்ந்து இத்தொகுதியில் EPS-ன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால், இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News October 31, 2025
ஸ்டாலினை சீரியஸாக எடுக்க வேண்டாம்: கவுதமி

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என CM ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி பேசியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அவர், அப்போதுதான் மக்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தைக் காப்பாற்ற இபிஎஸ் தலைமையிலான அதிமுகதான் சரியான தேர்வு எனவும் உறுதியாக கூறியுள்ளார்.


