News August 17, 2024
ஜெர்சியை மாற்றிக்கொண்ட நட்சத்திரங்கள்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் & ஒலிம்பிக்ஸ் பதக்க மங்கை மனு பாகர் தங்களது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிமாறிக்கொண்டனர். ஒலிம்பிக்ஸில் இந்திய அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது தோழமையை பாராட்டும் வகையில், மனுவுக்கு கைஃப் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Similar News
News October 14, 2025
ஆஸி. தொடரில் இருவரின் எதிர்காலம் தெரிந்துவிடும்..

ஆஸி., தொடரில் ரோஹித், கோலி ஆகியோரின் பெர்ஃபார்மன்ஸ், அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதால், நெருக்கடி ஏற்பட்டிருப்பதை இருவரும் உணர்ந்திருப்பார்கள் என கூறிய ரவி சாஸ்திரி, அவர்களின் உடற்தகுதி, ஃபார்ம் ஆகியவை ஆஸி. தொடரின் முடிவில் தெரிந்துவிடும் எனவும் கூறினார்.
News October 14, 2025
முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று அணை முழுவதும் சோதனை நடத்தினர். அதேபோல், திருச்சி கலெக்டர் ஆபிஸ், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்கு பிறகு இவை அனைத்தும் புரளி என தெரியவந்துள்ளது. அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
News October 14, 2025
BREAKING: இரவில் விஜய்யை சந்தித்தார்

கடந்த 15 நாள்களாக தலைமறைவாக இருந்த தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியே வந்தார். செப்.27-ம் தேதி கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், N.ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாகினர். தற்போது, கரூர் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக வெளியே வந்த நிர்மல்குமார், இரவு விஜய்யை சந்தித்து 1 மணி நேரத்திற்கு ஆலோசனை நடத்தியுள்ளார்.