News August 17, 2024

ஆற்காடு சுரேஷ் நினைவஞ்சலி: போலீசார் தீவிர கண்காணிப்பு

image

மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளன்று, அவரது கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக கைதான குற்றாவளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இரு தரப்பினரும் பெரம்பூர் மற்றும் புளியம்தோப்பு பகுதிகளில் வசிப்பதால், அசம்பாவிதம் நடக்காதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

திருவள்ளூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

திருவள்ளூர்: மூன்றாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

மூன்றாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 16.09.2025 முதல் 14.10.2025 வரை நகர்புறங்களில் 28 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 56 முகாம்களும் மொத்தம் 84 முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள எவரேனும் இருந்தால் முகாம் நடைபெறும் நாளன்று சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 16, 2025

விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட காவல் ஆணையர்

image

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
நோக்கில் நடிகர் பாஸ்கர் நடித்துள்ள “நில் கவனி நேசி” என்னும் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த குறும்படத்தை ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் வெளியிட்டார்.
போக்குவரத்து விதிகள் சம்பந்தமாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது

error: Content is protected !!