News August 17, 2024

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (56).விவசாயம் செய்து வந்த இவர், நேற்று காலை வழக்கம்போல் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்றார். அப்போது, சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், காட்டுப்பன்றி வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News January 19, 2026

விழுப்புரத்தில் பவர் கட்!

image

அரசூர், காரணை பெரிச்சனூர், சொர்ணாவூர் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை(ஜன.20) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம். பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், கரடிப்பாக்கம், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, மேல்வாலை, ஆர்.ஆர்.பாளையம் கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 9:00 – 4:00 மணி வரை மின் தடை.

News January 19, 2026

விழுப்புரத்தில் துணிகரக் கொள்ளை!

image

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆபிதா கார்டன் பகுதியில் வசிக்கும் ராஜஸ்ரீ என்பவர் பொங்கல் விழாவிற்கு சொந்த கிராமத்திற்கு சென்று, நேற்று(ஜன.18) மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 1.50 லட்சம் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

News January 19, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!