News August 17, 2024
தருமபுரி அரசு கல்லூரியில் பொது கலந்தாய்வு

தர்மபுரி அரசு கல்லூரி முதல்வர் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 2024 நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 19 காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் நடைபெறுகிறது. இதில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் தரவரிசைப்படி ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
தருமபுரிக்கு வந்த திரைப்பட இயக்குநர்

அரூரில் இன்று தண்டகாரண்யம் திரைப்படத்தின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் அரூர் அம்பேத்கர் அறிவக அறக்கட்டளையில் யாசட் இயக்குநர் அதியன்ஆதிரை, கலை சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயக்குநர் த.ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் பிரதீப்காளிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கோட்டீஸ்வரன் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
News October 13, 2025
மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், இன்று (13.10.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்து உரிய துறைகளின் அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
News October 13, 2025
தருமபுரி: பெற்றோர் திட்டியதால் மாணவி விபரீத முடிவு

அரூர் வர்ணதீர்த்தம், கேகே நகரை சேர்ந்த யுவராஜ். இவரது மகள் ரித்திகா (21). இவர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ரித்திகா செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்ததால் படிப்பில் கவனம் சிதைந்து விடும் எனக்கூறி பெற்றோர் ரித்திகாவை கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த அவர் நேற்று விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.