News August 17, 2024

தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

image

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.

Similar News

News January 14, 2026

புதுவை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

image

புதுவை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

புதுச்சேரி மக்களுக்கு GOOD NEWS

image

புதுச்சேரி ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு இலவச துணிக்கு பதிலாக மொத்தமாக 1,34,168 பயனாளிகளுக்கு ரூ.13,41,68,000 நிதி உதவி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேற்று நேரடியாக வரவு வைக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

புதுவை: மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

image

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சார்லஸ் (45). மதுப்பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்து‌ள்ளது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது மனைவி மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் தற்போது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!