News August 17, 2024

புதுகை பயணிகளுக்கு GOOD NEWS

image

புதுக்கோட்டை ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் திருநெல்வேலி – பட்னா சிறப்பு ரயிலில் உள்ள முன்பதிவுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். இந்த ரயிலானது இன்று இரவு இரவு 09:45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த செய்தியை திருநெல்வேலியில் வசிக்கும் புதுக்கோட்டை மக்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 17, 2025

புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

image

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இச்சடி சாலையில் நேற்று அசோக்குமார் (49) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 17, 2025

புதுகை: தெருநாய்களால் பலியான 20 ஆடுகள்!

image

கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவர் செம்மறி ஆடுகளை வளர்ந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு கொட்டகைக்கு சென்றபோது அங்கு 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 20 ஆடுகளும் பலியாகின.

News December 17, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!