News August 17, 2024

ஈரோடு: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

image

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

Similar News

News September 18, 2025

ஈரோடு மக்களே முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 30- ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு தபால் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில், அஞ்சல் துறை சேவைகள் பற்றி பொதுமக்களின் குறை மற்றும் கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் 24 தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா்
கி.கோபாலன் தெரிவித்தார்.

News September 18, 2025

ஈரோடு: போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு!

image

ஈரோடு: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, காப்பீடு இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, மது போதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது, 18 வயதுக்குட்பட்டவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News September 18, 2025

ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!