News August 17, 2024
குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால், அந்த நிறத்தில் ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு குரு பகவானை அலங்கரிக்க வேண்டும் என்றும், கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் எனவும் கூறுகிறார்கள்.
Similar News
News October 22, 2025
இயக்குநரின் இரக்கமற்ற ட்வீட்.. கடும் எதிர்ப்பு

இந்தியாவில் ஒரு நாள் மட்டுமே தீபாவளி என்றும், காஸாவில் ஒவ்வொரு நாளுமே தீபாவளி எனவும் X-ல் இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் குழந்தைகள் உள்பட 68,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதனை தீபாவளி கொண்டாட்டத்துடன் ஒப்பிடும் ராம் கோபால் வர்மா மனிதனாக வளர்ச்சி பெற பல ஆண்டுகள் ஆகும் என்று சாடும் நெட்டிசன்கள், அவரை ஈவு இரக்கமற்றவர் என விமர்சித்துள்ளனர்.
News October 22, 2025
மழைக்காலத்தில் உதவும் டிப்ஸ்!

*மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம்.
*ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
*ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை மறைந்து போகும்.
News October 22, 2025
நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(அக்.22) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமுடன் இருங்கள்!