News August 16, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

image

பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெருமக்கள் தங்கள் ஊர் நுழைவாயில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் வழித்துணை மாதா கோவில் கட்டியுள்ளனர். அவற்றினை அகற்றுவதற்கு தங்கள் பகுதி ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News July 11, 2025

சாலையோரம் கிடந்த குழந்தை

image

விழுப்புரம் மாவட்டம். வளவனுார் அடுத்த வி.பூதூர் ஊராட்சியில், கிராம மக்கள் நேற்று 100 நாள் வேலை செய்து கொண்டு இருந்த போது, சாலையோரம் குழந்தையின் அழுகுரல் கேட்டு, துணியால் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குழந்தையை மீட்டு யார் அந்த குழந்தையை வீசி சென்றது என விசாரித்து வருகின்றனர்.

News July 11, 2025

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 12 ஆம் தேதியன்று குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், எண் மாற்றம் போன்ற பணிகளை ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் இது நடத்தப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!