News August 16, 2024
தஞ்சையில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

ஒரத்தநாடு அடுத்த திருமங்கலக்கோட்டை முக்கரை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் தடுப்பு காவலில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 9, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள 250 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள், 3 திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமையாகிய இன்றும் (நவ.9) செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலையினை தடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News November 9, 2025
தஞ்சை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
தஞ்சை: வெறிநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலி

தஞ்சாவூர் இராமநாதபுரம் கிராமம் தெற்கு மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் எஸ். சரவணன் இவர் மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் அவரது ஆடுகளை சுமார் 10 தெரு நாய்கள் கடித்துக் குதறி ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 6 ஆடுகள் உயிரிழந்ததால் சரவணன் குடும்பத்தினர் வேதனையடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


