News August 16, 2024

செங்கல்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 16 பேருக்கு படுகாயம்

image

பவுஞ்சூரிலிருந்து பெண்கள் உள்பட, 18 பேர், நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இன்று மகேந்திரா டூரிஸ்ட் வேனில், வேலைக்கு சென்றனர். திருப்போரூர் ஆறு வழிச் சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்புற சக்கரம் வெடித்ததில், நிலைதடுமாறிய வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பெண்கள் உட்பட 16 பேருக்கு தலை, கால், கை என படுகாயம் ஏற்பட்டது.

Similar News

News November 5, 2025

செங்கல்பட்டு மக்களே இதை கண்டிப்பாக பண்ணுங்க!

image

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள சிவன் கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

மாமல்லபுரம்: ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்’

image

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘த.வெ.க. முதல்வர் விஜய்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ADMK- TVK கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், த.வெ.க.-வின் இந்த முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

News November 5, 2025

வன்மத்தை கக்கிய முதல்வர் – விஜய்

image

முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டி உள்ளார். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற த.வெ.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘ எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு, வேதனையில் அமைதி காத்த போது எங்களுக்கு எதிராக அரசியல் செய்தார்கள்’ என விஜய் தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.

error: Content is protected !!