News August 16, 2024

கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

வடபாதிமங்கலம் அருகே கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜெகதீசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Similar News

News July 7, 2025

திருவாரூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஓட்டக்குடி பகுதியில் வசிப்பவர் சுஜாதா (33). இவரது கணவர் பிரபாகரன் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி செல்போன் வாயிலாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுஜாதா சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

திருவாரூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!