News August 16, 2024

கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

வடபாதிமங்கலம் அருகே கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜெகதீசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Similar News

News November 4, 2025

திருவாரூர் வருகை தந்த பிரபல நடிகர்!

image

பக்ரைனியில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டியில், வடுவூர் பகுதியில் சேர்ந்த அபினேஷ் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றார். அவரை வாழ்த்தும் விதமாக நேரடியாக வடுவூருக்கு வந்த நடிகர் துருவ் விக்ரம் அபினேஷை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 4, 2025

திருவாரூர்: சாராயம் கடத்திய இருவர் கைது

image

நன்னிலம் பேரளம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தி வந்த புதுச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

News November 4, 2025

திருவாரூர்: காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2025 – 2026ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 15.11.2025-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பயிர் காப்பீட்டுதல் கட்டணமாக சம்பா நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1393 செலுத்தி, விவசாயிகள் பயனடையலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!