News August 16, 2024
மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” எனும் Beti Bachao Beti Padhao (BBBP) திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள ஆட்சியர இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
News September 17, 2025
சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டம் சோதியக்குடி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News September 17, 2025
காதலியின் தாயார் வன்கொடுமை சட்டத்தில் கைது

அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்ற இளைஞர் கடந்த 15ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் புதிய திருப்பமாக வைரமுத்துவின் காதலி மாலினி என்பவரின் தாயார் விஜயா கைது செய்யப்பட்டுள்ளார். மாலின் சகோதரர் குகன் , அன்புநிதி பாஸ்கர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை விடுத்துள்ளனர்.