News August 16, 2024
புதிய டிஎஸ்பியாக திருநாவுக்கரசு நியமனம்

முதல்வர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதி படி விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய துணை உட்கோட்டம் பிரிக்கப்பட்டு, இதில் விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்திற்குட்பட்டு செயல்படும் விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி புதிய டிஎஸ்பி-யாக திருநாவுக்கரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் செஞ்சி டிஎஸ்பியாகவும் செயல்படுவார்.
Similar News
News October 28, 2025
விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.27) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <


