News August 16, 2024
சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இன்றுமுதல் போரூர்- வடபழனி இடையே போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. காரப்பாக்கத்தில் மெட்ரோ தூண் அமைக்க ராட்சத கிரேன் பணியில் ஈடுபட்டுள்ளதால் போரூரில் இருந்து வளசரவாக்கம், வடபழனி செல்லக்கூடிய ஆற்காடு சாலை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது. மாற்று ஏற்பாட்டின் படி ஆலப்பாக்கம் வழியாக ஆற்காடு சாலையை சென்றடையலாம்.
Similar News
News October 28, 2025
BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மொந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை (அக்.28) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 28, 2025
கண்ணகி நகர்: கார்த்திகாவை சந்தித்த முன்னாள் ஆளுநர்

ஆசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள கார்த்திகாவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று, வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கண்ணகி நகருக்கு சென்று கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து மாலை அணிவித்தார்.
News October 27, 2025
சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


