News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News October 17, 2025
16 வயது பெண்ணுடனான பாலியல் உறவு குற்றமல்ல: HC

2005-ல் 16 வயது பெண், தனது விருப்பத்தால் இஸ்லாம் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், இஸ்லாம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமின் மேல்முறையீட்டை விசாரித்த அலகாபாத் HC, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், திருமணமாகி 16 வயது பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டது குற்றமாகாது என கூறி, தண்டனையை ரத்து செய்தது.
News October 17, 2025
மனம் கவர்ந்த மகா நடிகைக்கு இன்று ஹேப்பி பர்த்டே!

சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், இன்று இந்திய சினிமாவில் தனி இடத்தை உருவாக்கி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தேசிய விருதை வென்ற இவரின் சினிமா கேரியர், பல வெற்றிகளையும் விமர்சனங்களையும் உள்ளடக்கியது. தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டவர், தற்போது பாலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்க தொடங்கிவிட்டார். உங்களுக்கு பிடிச்ச கீர்த்தி சுரேஷ் படம் எது?
News October 17, 2025
PoK உருவாவதற்கு நேருவே காரணம்: ஜிதேந்திர சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உருவாவதற்கு வழிவகுத்த போர் நிறுத்தத்திற்கு நேருவே காரணம் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை அளித்திருந்தால், பாக்., – காஷ்மீர் பிரச்னையே எழுந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும் என்றும் கூறினார்.