News August 16, 2024
ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News October 30, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் வர்த்தக தள்ளுபடிகளை நம்பி ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மிகவும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் சில சமயங்களில் மோசடியின் அறிகுறியாக இருக்கலாம். தவறான விளம்பரங்களில் சிக்காமல் இருக்கும் வழிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு, சந்தேகங்கள் ஏற்பட்டால் இலவச தொலைபேசி 1930 இல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.
News October 30, 2025
ஈரோடு: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

ஈரோடு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.


