News August 16, 2024

“நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்”

image

விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று, “பழமர சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் பழமரகன்று, தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு நர்சரிகளுக்கு செல்லும்போது பழ மரக்கன்றுகளின் உண்மை தன்மையை அறிந்து வாங்க வேண்டும்; நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வரும் கன்றுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்; மேலும், விற்பனை ரசீதை நர்சரி உரிமையாளரிடம் கேட்டு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 3, 2025

விருதுநகர்: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

image

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 3, 2025

விருதுநகர்: குழந்தை தத்தெடுத்து வளர்க்க அழைப்பு!

image

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை ( 04562 – 293946) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

விருதுநகரில் 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா?

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருச்சுழி பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் ராஜபாளையம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் காரியாபட்டி பகுதியில் 14 மில்லி மீட்டர் மழையும் கோவிலாங்குளம் பகுதியில் 7.60 மில்லி மீட்டர் மழையும் அருப்புக்கோட்டையில் 6.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!