News August 16, 2024
பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தின் சாா்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 126 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின்கீழ் ரூ.5.04 லட்சம் உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி வழங்கினார். அப்போது, மண்டல தலைவா் ரதீஷ் சந்திர ஜா, கோட்ட மேலாளா்கள் நஞ்சுண்டா, ஸ்ரீதா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News October 30, 2025
கோவை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
கோவையில் இலவச பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு இலவச “பழங்கள் மற்றும் காய்கறிகள் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல்” பயிற்சி (அக்டோபர் 30 முதல் நவம்பர் 26 வரை) நடைபெற உள்ளது. இதில் வயது 18-35, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 97911-77578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
பெண் வயிற்றில் இருந்து ஏழரை கிலோ கட்டி அகற்றம்

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலி காரணமாக நீலகிரியை சேர்ந்த பெண் ஒருவர் அனுமதிக்க பட்ட நிலையில் மருத்துவமனை மருத்துவகுழுவினர் அப்பெண் வயிற்றில் இருந்து ஏழரை கிலோ கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர். இச்சிகிச்சையை 6-க்கும் மேற்பட்ட மருத்துவ குழு சுமார் 5 மணி நேரம் போராடி இதனை செய்தனர்.


