News August 16, 2024

திருவாரூர் பல்கலைக்கழகம் தரவரிசையில் முன்னேற்றம்

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுந்தந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வாய்த்த பிறகு துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனத்தால் ‘ஏ’ பிளஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார் அவர்.

Similar News

News August 18, 2025

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்கள் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 54 பேரை போலீசார் ஒரே நாளில் அதிரடியாகக் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவின்படி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், பேரளம் உட்பட மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள், வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர்கள் என்று இதுவரை போலீசார் 54 பேரை கைது செய்துள்ளனர்.

News August 18, 2025

திருவாரூர்: உங்கள் Phone காணாமல் போனாலும் No Tension!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<>சஞ்சார் சாத்தி<<>>’ என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க. SHARE பண்ணுங்க!

News August 18, 2025

திருவாரூர்: 31-ம் தேதி வரை கால அவகாசம்!

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகர், கோட்டூர் தட்டாங்கோவில் மற்றும் வண்டாம்பாளை, கிடாரங்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வருகிற 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!