News August 16, 2024

குற்றாலத்தில் ‘சாரல் திருவிழா’ இன்று தொடக்கம்

image

குற்றால ‘சாரல் திருவிழா’ இன்று(ஆக.,16) தொடங்கி 4 நாள் நடைபெறுகிறது. விழாவில் முதலாவதாக, ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் காலை 10 மணிக்கு மலர் கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, கலைவாணா் அரங்கில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகிக்கிறார். எம்.பி.க்கள் துரை வைகோ, ராணி ஸ்ரீகுமாா், பழனிநாடாா் எம்எல்ஏ முன்னிலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Similar News

News October 23, 2025

தென்காசி: பெண் தற்கொலை – மூன்று பேர் கைது

image

மருதம்புத்தூரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சமூக வளைதளம் மூலம் அப்பெண்ணுடன் பழகிய சிலர் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டதாக அவமானமடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக குறும்பலாப்பேரி கண்ணன், மருதம்புத்தூர் முத்துராஜா, முருகேசன் ஆகியோரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

News October 23, 2025

தென்காசி: மழைக்காலத்தில் இந்த App தேவை

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இயற்கை வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் TN-Alert App ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம். பேரிடர் காரணமாக புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இது உதவும். மேலும் விபரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News October 23, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!