News August 16, 2024
சென்னை தாம்பரத்தில் பயணிகள் கடும் அவதி

செங்கல்பட்டு-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரமாக மின்சார ரயில்கள் வராததால் ரயில் நிலையங்களில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
Similar News
News September 18, 2025
BREAKING: சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று (செ.18) உடல்நலக் குறைவால் காலமானார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், துரைப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முன்னதாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை காரணமாக உடல் பலவீனமடைந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 18, 2025
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி மாணவர் சேர்க்கை செப்.30 வரை நீட்டிக்கப்படுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இதில் 14 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சியில்
சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது.
News September 18, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <