News August 16, 2024
IPL மெகா ஏலம் நிறுத்தம்?: ஜெய்ஷா பதில்

நன்கு செட்டிலாகிய அணிகள் மெகா ஏலத்தை விரும்பவில்லை எனவும், செட்டிலாகாத அணிகள் ஏலத்தை விரும்புவதாகவும் BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அதேபோல் இம்பேக்ட் பிளேயர் விதியில் சில சாதகங்கள், பாதகங்கள் உள்ளதாகவும், அணி நிர்வாகங்களுடனான சமீபத்திய சந்திப்பில் இது தொடர்பாக விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மெகா ஏலம் குறித்த இறுதி முடிவு விரைவில் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 15, 2025
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது: PM மோடி ஆவேசம்

பஹல்காமில் மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக சுதந்திர தின உரையில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் ஆவேசமாக பேசிய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் நம்மிடம் எடுபடாது என்றார். சிந்து நதி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது எனவும் அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றார்.
News August 15, 2025
SPORTS ROUNDUP: விதிமீறல்.. SA வீரரை தண்டித்த ICC!

◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
◆2-வது T20-யில் ஆஸி. வீரரின் Ben Dwarshuis-ன் விக்கெட்டை வீழ்த்திய SA வீரர் கார்பின் போஷ், விதியை மீறி கொண்டாடியதால், அவருக்கு ICC ஒரு Demerit பாயிண்ட் கொடுத்துள்ளது.
◆WI-க்கு எதிராக தொடரை இழந்த PAK. அணி வீரர்கள் சொந்த ரெக்கார்டுக்காக விளையாடுவதால் தான் தோல்வி என Ex வீரர் சோயிப் அக்தர் விமர்சனம்.
News August 15, 2025
மக்களாட்சி நிலைக்க உறுதியேற்போம்: EPS

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EPS தனது வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச் செம்மல்களை, போற்றி வணங்கி நினைவுகூர்வதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு, முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திட, நல்லாட்சி அமைத்திட உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.