News August 16, 2024

கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு விதிப்பு

image

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அதிகளவிலான கனரக லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 முதல் மாலை 3 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை, சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

தென்காசி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக் செய்து <<>>பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News November 5, 2025

தென்காசி: இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் படுகாயம்

image

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாம்பவர்வடகரை- வேலாயுதபுரம் ரோட்டில், நேற்று இரவு நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் கடையநல்லூரை சேர்ந்த முத்தையாசாமி மகன் முப்புடாதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சாம்பவர்வடகரை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 5, 2025

தென்காசி முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

image

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் அ. ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!