News August 16, 2024

குமரி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

image

குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News

News January 18, 2026

குமரி: Spam Calls-க்கு இனி END CARD

image

குமரி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 18, 2026

குமரி: தமிழ் தெரிந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

குமரி: நண்பனை அரிவாளால் வெட்டியவர் கைது

image

கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சுபின். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராஜித் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நண்பர்களான நிலையில் சுபினை, ராஜித் மது குடிக்க அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபினை, ராஜித் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து சுபின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து ராஜித்தை கைது செய்தனர்.

error: Content is protected !!