News August 16, 2024

திண்டுக்கல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 18, 2025

திண்டுக்கல்: காதலியை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்!

image

திண்டுக்கல் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் தனது காதலி சரிவர பேசாமல் இருந்ததால் அவரது போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் காதலியின் பெற்றோர் சானார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பெயரில் மகளிர் காவல் துறையினர் ஜெயசீலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News December 18, 2025

பழனி: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி

image

பழநியை சேர்ந்த போஸ்ராஜன் இவருடைய 2 மகன்களுக்கு திண்டுக்கல்திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தாண்டிக்குடியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த தரங்கினி,முசிறியை சேர்ந்த ஜெயபால், துறையூரை சேர்ந்த சிவா,சசிக்குமார் ஆகியோர் ஆசை வார்த்தைகூறி ரூ.90 லட்சம்பெற்று கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர் பின் அது போலீ என தெரியவந்தது.புகாரின்பேரில் சசிக்குமார்; ஜெயபால்; இருவர் கைது

News December 18, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (17.12.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!