News August 16, 2024

திருவேற்காட்டில் அகற்றவுள்ள வீடுகளை ஆய்வு செய்த எம்பி

image

திருவேற்காடு கூவம் ஆற்றை ஒட்டியுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று சசிகாந்த் செந்தில் எம்பி அப்பகுதிக்கு சென்று வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வீடுகளை அகற்ற கூடாது என கண்ணீர் மல்க கூறினர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக எம்.பி. தெரிவித்தாா்.

Similar News

News September 9, 2025

திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சுமார் 2 லட்சம் கால்நடைகளுக்கு தோல்கழலை நோய் தடுப்புத் திட்டத்திற்கான பூஸ்டர் தடுப்பூசிப்பணி 03.09.2025 முதல் 30.09.2025 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை தவறாது போட்டு கொள்ளுமாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)

News September 9, 2025

திருவள்ளூர்: whats App இருக்கா உஷார்!

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை whats App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்தத் துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News September 9, 2025

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 383 மனுக்கள் ஏற்பு

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது. இதில் நிலம் சம்பந்தமாக 39 சமூக பாதுகாப்பு திட்டம் 22 வேலை வாய்ப்பு வேண்டி 28 பசுமை வீடு அடிப்படை வசதி வேண்டி 19 இதர துறை சார்பாக 275 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அவர்கள் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

error: Content is protected !!