News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News October 18, 2025
இன்று முதல் 110 சிறப்பு ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்புகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இன்று 24 ரயில்கள், நாளை 19 ரயில்கள், 20-ம் தேதி 23 ரயில்கள், 21-ம் தேதி 25 ரயில்கள், 22-ம் தேதி 19 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
News October 18, 2025
Business Roundup: 3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்

*லாக்கர் வாடகை கட்டணத்தை பஞ்சாப் தேசிய வங்கி குறைத்துள்ளது. *இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகின. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ₹88.03-ஆக உள்ளன. *சர்வதேச ரயில் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம். *அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய கூடுதல் முக்கியத்துவம்.
News October 18, 2025
9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23-ம் தேதி மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது