News August 15, 2024
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: மம்தா பானர்ஜி

மே.வங்க பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மம்தா வலியுறுத்தியுள்ளார். நீதிக்காக போராடும் சக மாணவர்களை தான் குறை சொல்ல விரும்பவில்லை என்ற அவர், இந்த வழக்கில் தங்களுக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தையும் சிபிஐயிடம் கொடுத்துள்ளோம் என்றார். குற்றவாளிகளை தூக்கிலிட்டால் தான் மற்றவர்கள் அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
Similar News
News January 13, 2026
மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்

<<18842248>>இலங்கை கடற்படை<<>> சிறைப்பிடித்த 10 ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 13, 2026
OPS போன்றே கூட்டணி பற்றி பேசிய பிரேமலதா

கூட்டணி தொடர்பாக தேமுதிக மா.செ.க்களை மீண்டும் அழைத்து பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்தார். இதற்கு காரணம் ஏற்கெனவே, நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தவெக, சிலர் அதிமுக என விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், OPS போன்றே தை பிறந்தால் வழி பிறக்கும் என பிரேமலதா கூறியுள்ளார்.
News January 13, 2026
உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியா? அன்புமணி

திமுக ஆட்சியில் உழவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குவதாக CM ஸ்டாலினே கூறினால், அதை விடக் கொடுமையான கேலிக்கூத்து இருக்க முடியாது என அன்புமணி விமர்சித்துள்ளார். உழவர்களுக்கு தினமும் ₹30க்கும் குறைவாக மட்டுமே வருவாய் கிடைக்கிறது, ₹289.63 கோடி இழப்பீடு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியாக தெரிகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி கடுமையாக சாடியுள்ளார்


