News August 15, 2024
அலோபதி மருந்துகளால் உயிரிழப்பு: ராம்தேவ்

அலோபதி மருந்துகளை உட்கொள்வதால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவ சுயசார்பு என்பது இன்னும் கனவாகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கு கடந்த ஆக. 13ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News January 14, 2026
CRIME TIME: ஏற்காட்டில் முறையற்ற உறவால் நடந்த விபரீதம்!

ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதியில் சாலா(33) என்ற பெண் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த வழக்கில் இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் முறையற்ற உறவில் இருவரும் இருந்து வந்த நிலையில் பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இந்தநிலையில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.
News January 14, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்

ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், EPS-யை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று தமமுகவின் நிறுவனர் <<18845319>>ஜான் பாண்டியன்<<>>, தாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் EPS இறங்கியுள்ளார். வரும் 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்ய அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.


