News August 15, 2024
விஜயகாந்த் இருந்திருந்தால்.. திருமா பரபரப்பு பேச்சு

விஜயகாந்த் நல்ல உடல்நிலையோடு உயிருடன் இருந்திருந்தால், தமிழக அரசியலே திசை மாறி இருக்கும் என திருமாவளவன் தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி போட்டியிட்டதை நினைவு கூர்ந்தார். கல்லூரி படிக்கும்போது, விஜயகாந்த் படங்களை விரும்பி பார்ப்பேன் என்றும் தெரிவித்தார்.
Similar News
News August 15, 2025
இவையும் இந்திய தேசத்தின் கொடிகள் தான்!

இன்று நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இந்திய தேசிய மூவர்ணக் கொடிக்கு முன்பு, இந்திய நாட்டை அடையாளப்படுத்த பல கொடிகள் உபயோகப்படுத்தப்பட்டன. தற்போது உள்ள கொடி குறித்து அறிய <<17410370>>இங்கே <<>>கிளிக் செய்யவும். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு 1880 முதல் 6 வகையான கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் வண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், இலக்கு சுதந்திரமாகவே இருந்தது.
News August 15, 2025
தமிழகத்தின் குரல்: முதல்வர்களுக்கு கிட்டிய உரிமை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட PM சுதந்திர தினத்தில் கொடியேற்றும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM ஏன் கொடியேற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அன்றைய CM கருணாநிதி. தொடர்ந்து, அப்போதைய PM இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள், நேரில் வலியுறுத்தல், சட்டப்பேரவையில் தீர்மானம் என அழுத்தம் கொடுத்தார். பின்பு, 1974-ல் முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமையை இந்திரா காந்தி வழங்கினார்.
News August 15, 2025
தலைமை மீது அப்செட்டில் MP தங்க தமிழ்செல்வன்!

திமுக தலைமை மீது MP தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார். <<17279741>>அரசு விழா மேடையில் தன்னை அவமதித்த<<>> ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக அவர் தலைமையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், MLA மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மா.செ.,வாக இருந்தும் தனக்கு மதிப்பில்லை என நிர்வாகிகள் சிலரிடம் புலம்பியுள்ளாராம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மோதல் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.