News August 15, 2024
பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த குற்றவாளி கைது

சென்னை திருமங்கலம் அருகே பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியான மணிரத்தினம், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் தனது கூட்டாளி சுனில் குமார் உடன் திருமங்கலம் சாலையோரம் அருகே பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்தபோது, போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
சென்னை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் ஆட்டோக்களை விதிகளை மீறி ஆண்கள் இயக்கினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கடுமையாக எச்சரித்துள்ளார். சமூக நலத்துறை பலமுறை எச்சரித்தும் விதிமீறல் தொடர்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
சென்னை: இங்கெல்லாம் இன்று தண்ணீர் வராது!

குடிநீர் பணி இணைப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டை கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் ஒரு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நாளை ( நவ-9) அன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே.சாலை முதல் ஸ்டெர்லிங் சாலை வரை ( நவ -10) ஆம் தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான தண்ணீர் பிடித்து வைக்கும்படி தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
சென்னை மெரினாவில் இன்று கலைத்திருவிழா

சென்னை மெரினாவில் இன்று கலைவிழா நடைபெற உள்ளது. இதில் ஆதிமேளம், வில்லுப்பாட்டு, மல்லர் கம்பம், தென்னிந்திய நாட்டுப்புறக் கலைகள் என மெரினாவில், ஒரே மேடையில் நடைபெற உள்ளது. நாள்: 09.11.2025 (ஞாயிறு) நேரம்: மாலை 5:30 மணி
இடம்: நீலக் கொடி பகுதி, மெரினா கடற்கரை. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து கலைத்திருவிழாவை ரசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்ஜோய் பண்ணுங்க.


