News August 15, 2024
உதகை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றம்

உதகை அரசு கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News September 16, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News September 15, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி நகராட்சி பகுதிகளுக்கு சீனிவாசா திருமண மண்டபத்திலும், நெல்லியாலாம் பகுதி பாண்டியர் குடோன் பகுதியிலும், உள்ளத்தி பகுதிகளுக்கு உள்ளத்தில் சமுதாயக் கூட்டத்திலும், நிலக்கோட்டை பகுதிகளுக்கு பாட்டவயல் எம்வி சன்ஸ் கட்டிடத்திலும் நடைபெறுகிறது.
News September 15, 2025
அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கிய அரசு கொறடா

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், அன்புக்கரசன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவ, மாணவிகளில் 23 மாணவ, மாணவிகளுக்கு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில் ரூ.2,000/- உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் .ஆர்.கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.