News August 15, 2024

உதகை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றம்

image

உதகை அரசு கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது .  மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 6, 2025

நீலகிரி: இதை செய்தால் பணம் போகும்!

image

நீலகிரி மக்களே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. அதாவது, WhatsApp, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி E-Challan மெசேஜ்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தைகயை எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே, உஷாராக இருங்க மக்களே! இதை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 6, 2025

நீலகிரியில் அரசு பேருந்து விபத்து!

image

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரிக்கு நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. நாடுகாணி பாண்டியாறு குடோன் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பேருந்தை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால், அதிர்ஷவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

News November 6, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். 10 வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றோருக்கு 300 ரூபாயும், பட்டய படிப்பு படித்தவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. எனவே ஊட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

error: Content is protected !!