News August 15, 2024

திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

image

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News February 23, 2026

திருப்பூர்: UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) மொத்த காலிப் பணியிடங்கள்: 349
2) வயது வரம்பு: 20 – 25
3) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4) விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
5) கடைசித் தேதி: மார்ச் 12, 2026. (SHARE பண்ணுங்க)

News February 23, 2026

BREAKING: காங்கேயம் அருகே பயங்கர விபத்து

image

காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திரவலசு தனியார் பள்ளி பகுதியில் எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2026

FLASH திருப்பூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

திருப்பூரில் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் திருப்பூரில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 9,44,178 பேரும், பெண்கள் 10,10,853 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 252 பேரும் என மொத்தம் 19,55,283 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <>கிளிக்<<>> (அ) Voter Helpline செயலி மூலம் இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என பார்க்கலாம். SHARE IT

error: Content is protected !!