News August 14, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மேலும் ஒரு விருது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது சுதந்திர தினத்தன்று வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியமைக்காக நல்லாளுமை விருதிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 2 விருதுகள் பெற உள்ளார்.
Similar News
News August 13, 2025
ஆக-15 குடியரசு தினமா? – நோட்டீஸால் பரபரப்பு!

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி கோபாலகிருஷ்ணபுரம் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட்-15ஐ குடியரசு தினம் எனக் குறிப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்ட நிகழ்வு பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
News August 13, 2025
சிவகாசியில் மீண்டும் ஒரு கொலை!

சிவகாசி: எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்(21), கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை தேடி வந்த நிலையில் எம்.புதுப்பட்டி காட்டுப்பகுதியில் தர்மலிங்கம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.
News August 13, 2025
விருதுநகரில் நாளை(ஆக.14) மறந்துடாதீங்க..!

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நாளை (ஆக.14) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <