News August 14, 2024
லாரன்ஸ் நடிக்காததற்கு இதுதான் காரணம்

விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘படை தலைவன்’ படத்தில் இருந்து லாரன்ஸ் விலகியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த இயக்குநர் அன்பு, லாரன்ஸ் மீது எந்த தவறும் இல்லை என்றார். லாரன்ஸின் கதாபாத்திரம் கனமான கதாபாத்திரமாக இருக்குமா என தனக்கு சந்தேகம் இருந்ததாலேயே, அவரை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 2, 2025
காஞ்சிபுரத்தில் லீவுக்கு எங்கெல்லாம் போகலாம்?

1.காமாட்சி அம்மன் ஆலயம் 2.காஞ்சி மடம், 3.சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம், 4.டாக்டர் C.N.அண்ணாதுரை நினைவு இல்லம் 5.ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில் 6.உலகளந்த பெருமாள் கோயில் 7.சுந்தர வரத பெருமாள் கோயில் 8.ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் 9.வைகுண்ட பெருமாள் கோயில் 10.ஏகாம்பரநாதர் கோயில். உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 2, 2025
கரூரில் வியாபாரிகளை விசாரிக்கும் CBI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாள்களாக விஜய் பேசிய இடத்தை அளவீடு செய்தனர். 3-வது நாளான இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள வியாபாரிகள் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராகினர். 8 பேரிடம் சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
News November 2, 2025
BREAKING: SIR-ஆல் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து

SIR பணிகளால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த பணிகளால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் நிலை உருவாகும் எனவும், இதனால் தமிழர்களின் உரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திருமா, பெ.சண்முகம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் SIR பணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


