News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News January 22, 2026

பள்ளிகள் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள்

image

<<18883212>>பள்ளிகள் தொடர் விடுமுறையையொட்டி<<>> தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் நெரிசலின்றி ஊருக்கு செல்ல ஏதுவாக, எழும்பூர் – குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் குமரிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் ஜன.26-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். முன்பதிவு தொடங்கியுள்ளது. முந்துங்கள்!

News January 22, 2026

ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார்: அண்ணாமலை

image

தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், OPS தனிமரமாக நிற்கிறார். இந்நிலையில், பொறுமையின் உருவமாக இருக்கக்கூடிய OPS மீண்டும் NDA கூட்டணிக்கு வருவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக் கூடிய ஒரு தலைவர் OPS. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்வார்கள்; அதனால் அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

பாடகி ஜானகியின் மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

தாய் இருக்கும்போதே மகன் இறப்பது பெரும் சோகம். தனது ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு பாடகி ஜானகி கண்ணீரில் மூழ்கியுள்ளார். நடிகரும், நடன கலைஞருமான <<18924063>>முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு<<>> பாடகி சித்ரா உள்ளிட்ட திரை பிரபலங்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மைசூரில் நடைபெற்றுவரும் அவரது இறுதிச் சடங்கில், கலந்து கொண்டு ஜானகிக்கு திரைப்பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!