News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News October 14, 2025

சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

image

தீபாவளிக்கு ஆம்னி பஸ்களின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து, டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை – நெல்லை செல்ல முன்பு ₹5,000 வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ₹3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களுக்கான டிக்கெட் விலையும் குறைந்துள்ளது. SHARE IT.

News October 14, 2025

சரியா தூங்கலைனா இந்த பிரச்னை வருமா?

image

இரவில் போதிய நேரம் தூங்காமல் இருந்தால் அடுத்த நாள் முழுக்க நமக்கு சோர்வாகவே இருக்கும். ஆனால் இந்தப் பழக்கம் நாள்படும்போது, ஏராளமான மனநல பிரச்னைகள்கூட வரக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் ரத்த அழுத்த உயர்வு, நீரிழிவு பாதிப்புகள், படபடப்பு, ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் ஏற்படுமாம். தூக்க பற்றாக்குறையால் மனநிலை மாற்றங்கள் அதிகரிப்பது, அடிக்கடி எமோஷனலாவது போன்றவையும் ஏற்படலாம்.

News October 14, 2025

கரூர் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது SIT

image

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்றியதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) இடைக்கால தடைவிதித்தது. இதனால் SIT குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் உடனடியாக சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

error: Content is protected !!