News August 14, 2024
கடலூர்: சுதந்திர தின விழாவுக்கு கலெக்டர் அழைப்பு

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்ததும், நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
Similar News
News September 19, 2025
கடலூர் அருகே இளைஞர் கொலை ?

பண்ருட்டி அருகே கட்டியாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (30). கட்டிட தொழிலாளியான, இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் ரத்த காயங்களுடன் கார்த்திக் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றிய பண்ருட்டி போலீசார் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? எனும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
News September 19, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.18) இரவு 10 மணி முதல் இன்று (செப்.19) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
கடலூர் மக்களே… தேர்வு இல்லாமல் அரசு வேலை!

கடலூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க…!