News August 14, 2024
ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி 102 வயது முதியவர் பலி

தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் விஜய் அம்மாள் என்பவர் தனது தந்தை மல்லையா(102) என்பவருடன் இன்று பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்மிற்கு வெளியே நின்ற மல்லையா அருகில் இருந்த ஏ.சி கம்பரசரில் கை வைத்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. மயங்கிய அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மல்லையா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Similar News
News August 22, 2025
BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னையில் இன்று (ஆக.22) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமான என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
News August 22, 2025
வந்தாரை வாழ வைக்கும் நம்ம சென்னை!

மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு 1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆக.22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அப்பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என ஒவ்வொரு பெயர்கள் மாறினாலும், இன்று வரை சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.
News August 22, 2025
சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (22.08.2025) திருவொற்றியூர் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட், வளசரவாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 11 மண்டலங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.