News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News November 16, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.15) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவரஹ்மான் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமாள் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் தமிழழகன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 15, 2025
தருமபுரி: ஆசிரியர் தேர்வில் 419 பேர் அப்சென்ட்!

தருமபுரியில் இன்று (நவ.15) நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தாள்I (OMR Based TET Paper I) தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 3,511 தேர்வர்களில் 3092 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதில் 419 தேர்வர்கள் வருகை புரியவில்லை. மொத்த விண்ணப்பதாரர்கள்- 3511
தேர்விற்கு வருகை புரிந்தோர் -3092 என்ன தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றும் பார்வையிட்டார்.
News November 15, 2025
ஆசிரியர் தகுதி தேர்வில் கலெக்டர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I (OMR Based TET Paper I) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு அரசுத் துறை மற்றும் முக்கிய இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.


