News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News November 8, 2025

தென்காசி: 90 வயது பாட்டிக்கு ரேடியோ கிடைத்தது

image

புளியங்குடி அருகே சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆதிலட்சுமி தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன் மர்ம நபர் இவரது ரேடியோவை திருடியதால் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் <<18188698>>மனுஅளித்தார்<<>>. இதை அறிந்த தனியார் எப்.எம் நிர்வாகம் புதிய ரேடியோ வழங்கியது. ரேடியோவை பெற்ற ஆதிலட்சுமி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

News November 8, 2025

தென்காசி : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

image

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

தென்காசி நகராட்சி புதிய கட்டிடம் ஏலம் அறிவிப்பு

image

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய காய்கறி சந்தையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் நவம்பர் 18ம் தேதி முதல் ஏலம் / ஒப்பந்த புள்ளி நடைபெற உள்ளது. இதன் மூலம் கடையை ஏலம் எடுக்க விரும்புவர்கள் 4 லட்சம் வைப்புத்தொகை கொடுத்து ஏலத்தில் கலந்து கொள்ள நகராட்சி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 18 முதல் நவம்பர் 27 வரை நகராட்சி அலுவலகத்தில் சென்று ஏல ஒப்பந்த படிவத்தை செலுத்திக் கொள்ளலாம். SHARE!

error: Content is protected !!