News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News August 14, 2025

வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவையில் ஈடுபடுத்தக் கூடாது

image

சிவகாசியில் சமீப காலமாக பட்டாசு ஆலைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அதிகரித்து வருகிறது. அவர்கள் கூலி அதிகம் கேட்காத காரணத்தால் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மொழி பற்றிய தெளிவு இல்லாத தொழிலாளர்களை அபாயம் நிறைந்த ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.

News August 13, 2025

சட்டவிரோத பட்டாசு தயாரித்த 5 பேர் மீது வழக்கு

image

வெம்பக்கோட்டை தெற்கு தெருவில் பாண்டியன் (30) என்பவருக்கு சொந்தமான தகரசெட்டில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 10 கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் கோதை நாச்சியார்புரம் காலனி தெருவில் ஆவுடையசங்கையா(47) பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது அவரிடமிருந்து 5 பெட்டிகளில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News August 13, 2025

முட்டை எடை குறைவாக இருந்தால் புகார் அளிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவுடன் முட்டை சாப்பிடுகின்றனர். சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் குறைந்தபட்சம் 45கி இருக்க வேண்டும். ஆனால் சில முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அளவு குறைவாக இருந்தால் அந்தந்த ஒன்றிய பிடிஓ.,க்களிடம் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!