News August 14, 2024
சென்னை கழிவுநீர் அகற்று வாரியம் புகார் எண் அறிவிப்பு

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் விஷவாயுக்கள் மனித உயிர்களை பாதிக்காமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள்கள் தொடர் விடுறை வருவதால் சென்னையில் வசிக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் சென்றதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
News August 14, 2025
நாளை விருது வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார்.
News August 14, 2025
சென்னை டு திருச்சிக்கு சிறப்பு ரயில்

3 நாள்கள் தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு முன்பதிவு இல்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. இதே ரயில் வரும் 17-ம் தேதி இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்து தாம்பரம் வரை இயங்கும். (SHARE)