News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News October 16, 2025

ஆரணி அரசு பொது மருத்துவமனையில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (அக்.15) உங்களைத் தேடி உங்கள் ஊரில் நடைபெற்றது. திட்டத்தின் கீழ் ஆரணி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான வசதிகள், மருந்து வழங்கல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

News October 15, 2025

தி.மலை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

image

திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் எண் 2-ல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹேமமாலினி மற்றும் அருள்பிரசாத் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இன்று (அக்.15) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

News October 15, 2025

தி.மலை மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

தி.மலை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிக்கூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். *மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!*

error: Content is protected !!